April 25, 2024

*பூப்பந்தாட்டப்பயிற்சிப்பட்டறை*

WTBF ன் யாழ்மாவட்ட பூப்பந்தாட்ட அபிவிருத்திக்கிளையின் ஏற்பாட்டில் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமையன்று கொக்குவில் JBC பூப்பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றது.இப்பயிற்சிமுகாமிற்கு விருந்தினராக முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பாணிப்பாளர் கௌரவ விமல்ராஜன் அவர்கள் வருகைதந்திருந்தார்.அத்துடன் பெற்றோர்களும் இறுதிவரை மாணவர்களுடன் இருந்து நிகழ்வை சிறாப்பித்திருந்தனர்.வருகைதந்த மாணவர்களின் பாடசாலை அதிபர்களும் இந்நிகழ்வில் இறுதிவரை கலந்துகொண்டமை சிறப்பான விடயமாகும். இப்பயிற்சிப் பட்டறையானது யாழ்மாமாவட்டத்தின் யாழ் நகரம் ,வலிகாமம், தீவகம் , வடமராட்சி ,தென்மராட்சி பகுதிகளை உள்ளடக்கிய வகையில் வருகைதந்திருந்த வீர வீராங்கனைகளுக்கு நடாத்தப்பட்டிருந்தது..சிறந்தமுறையில் காலை 7.30 மணி முதல் மாலை 5 மணிவரையில் இப்பயிற்சிமுகாம் நடைபெற்றது. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இம்முகாமில் கலந்துகொண்டமையை உணரமுடிந்தது.பயிற்சிமுகாமும் சிறப்பான முறையில் வீரர்களூக்கு பயன்பெறத்தக்க வகையில் வழங்கப்பட்டிருந்தது.கனடாவிலிருந்து வருகைதந்திருந்த WTBF ன் இலங்கைக்கான பட்மின்ரன்அபிவிருத்தி இணைப்பாளர் திரு.அன்ரனி ஜெயகாந்தன் அவர்கள் இப்பயிற்சிமுகாமை நடத்தியிருந்தார்.இவருக்கு உறுதுணையாக யாழ்மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் குமரேசன், ஜெயப்பிரதாபன் அவர்களும் ,கிளிநொச்சி மாவட்ட கிளையின் நிர்வாக உறுப்பினர் சது அவர்களும் செயற்பட்டிருந்தார்கள்இவ்வாறானதொரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணையாயிருந்த WTBF இன் லண்டன்கிளை மற்றும் , கனடாக் கிளையினருக்கும் ,செயற்படுத்துவதில் பெரும்பங்காற்றிய WTBF யாழ்.மாவட்டக் கிளை நிர்வாகத்தினர்க்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.WTBF

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert