März 28, 2024

மன்னாரில் கரை ஒதுங்கியது யாழ்மீனவர் உடலம்!

மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று (12) காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களில், இன்றைய தினம்  காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19)  என்பவரே, சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

மேலும், அதே இடத்தைச் சேர்ந்த செந்தூரன்-(வயது-28) என்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரும் காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம்  (12) மதியம், மூன்று மீனவர்கள் கோந்தைப்பிட்டி கடலில், தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர். இதன் போது மூன்று மீனவர்கள் உள்ளடங்களாக 8 பேர் படகில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது