März 29, 2024

ஃபைசரின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானிலிருந்து பாதுகாக்கும்

ஃபைசர்/பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் Omicron மாறுபாட்டிலிருந்து மக்களை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கு தொற்று அல்லது வேறு எந்த வகையான நோய்க்கும் எதிராக முன்னறிவிக்கப்பட்ட பாதுகாப்பில் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

எனினும், ஒமிக்ரோனுக்கு , ஃபைசர்/பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பூசி மூன்று டோஸ் போட வேண்டும் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும், 2022 மார்ச் மாதத்திற்குள் ஒமிக்ரோனுக்கு எதிரான புதிய தடுப்பூசியை உருவாக்கும் திட்டங்களை முழு வேகத்தில் தொடர்வதாக தடுப்பூசி தயாரிப்பாளர்கள் கூறினர்.

தொற்று ஆராய்ச்சிக்கான ஜெர்மன் மையத்தின் ஆரம்ப ஆய்வுகளிலிருந்து தனி முடிவுகள், ஃபைசர்/பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட்/ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளுக்கு ஒமிக்ரானுக்கு எதிரான ஆன்டிபாடி ஆற்றலில் குறிப்பிடத்தக்க குறைப்புகளைக் கண்டறிந்துள்ளது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஃபைசரின் தரவு, ஒமிக்ரோனை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனைப் பற்றி முதலில் வெளியிடப்பட்டது.

ஒமிக்ரோன் மாறுபாட்டை நடுநிலையாக்கும் திறனுக்காக ஃபைசர்/பயோஎன்டெக்  போடப்பட்ட 19 பேரின் இரத்தத்தை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர், மேலும் இதை முந்தைய கொரோனா வைரஸின் பிரதிபலிப்போடு ஒப்பிட்டனர்.

இதில் ஒமிக்ரோனுக்கு எதிரான இரத்தத்தின் நடுநிலைப்படுத்தலில் 25 மடங்கு குறைப்பைக் கண்டறிந்தனர். ஆனால் முழுமையான நோயெதிர்ப்பு போகவில்லை.

எனினும் மூன்று டோஸ்களைப் பெற்றவர்களின் இரத்தம், ஒமிக்ரோனுக்கு எதிராக தோராயமாக சமமான ஆற்றலைக் கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.