April 20, 2024

தெற்காசியா உதைபந்தாட்டக் கிண்ண 19 வயது பெண்கள் தேசிய அணியில்  மகாஜன வீராங்கனைகள் நால்வர்!

pinterest sharing button
email sharing button
sharethis sharing button

மகாஜனக் கல்லூரி ஆசிரியை செல்வி பத்மநிதி செல்லையா  தேசிய அணியின் பொறுப்பாசிரியர்
இந்த மாதம் (டிசெம்பர்) 11 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசியா உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை 19 வயதுப் பெண்களுக்கான தேசிய அணியில் (23 வீராங்கனைகளைக் கொண்ட அணி) மகாஜனக் கல்லூரி வீராங்கனைகளான சி.தர்மிகா,உ.யோகிதா, கிரிசாந்தினி, ம.வலன்ரீனா ஆகிய நால்வரும் இடம்பிடித்துள்ளனர்.

இந்த அணியின் பொறுப்பாசிரியராக எமது கல்லூரியின் பெண்கள் உதைபந்தாட்ட அணியின் பொறுப்பாசிரியராக விளங்கும் செல்வி பத்மநிதி செல்லையா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த அணி நாளை 08.12.2021 பங்களாதேஷ் பயணமாகவுள்ளது.

இந்த வீராங்கனைகளின் தற்போதைய பாடசாலை பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமார்(சாந்தன்) ஆவார்.