April 24, 2024

முல்லைத்தீவில் அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கைது!

முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது வீட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக இளஞ்செழியனும் மனைவியும் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இளஞ்செழியனை இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.