April 19, 2024

BREAKING NEWS: இ -பொ- பயிற்ச்சி இல்லை- ஸ்காட் லான் அதிரடி அறிவிப்பு: த- போராட்டத்தால் எடுக்கப்பட்ட முடிவு … !

சமீபத்தில் கோட்டபாய ராஜபக், ஷ ஸ்காட் லாந்து வந்தவேளை, தமிழர்கள் திரண்டு பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடுத்து ஸ்காட் லாந்து பொலிசார் கவனம் தமிழர்கள் பக்கம் திரும்பியது. மிகவும் நேர்த்தியாக, அவர்கள் போட்ட கட்டளைக்கு அமைவாக,  இந்த போராட்டம் இடம்பெற்றதை பார்த்த ஸ்காட் லாந்து பொலிசார் திகைத்து விட்டார்கள். இதனை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதேவேளை அங்கே போராட்டத்தில் கலந்து கொண்ட 10 வயது சிறுமியை கூட அவர்கள் கேட்டார்கள், ஏன் நீங்கள் இங்கே வந்தீர்கள் என்று ?. அந்த சிறுமி கூட எமக்கு நடந்த அநீதியை பொலிசாருக்கு தெளிவாகக் கூறினார் .  இன்று(24) ஸ்காட் லாந்தில் நடைபெற்ற பொலிஸ் கூட்டத்தில், இனிமேல் இலங்கைப் பொலிசாருக்கு தாம் பயிற்ச்சி வழங்கப் போவது இல்லை என்றும். அவர்களுக்கு கொடுத்து வந்த நிதி உதவிகளையும் தாம் நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்,  ஸ்காட் லாந்து பொலிஸ் மா அதிபர். லண்டன் தமிழர்களின்…

போராட்டத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றிகளில் இதுவும் ஒன்று. ஸ்காட் லாந்து போராட்டம் தேவை இல்லை. இது எந்த வகையிலும் உதவி புரியப் போவது இல்லை என்று சிலர் வீட்டில் இருந்தபடி , பேஸ் புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் செய்திகளை எழுதி வந்தார்கள். ஆனால் இன்று அவர்கள் அனைவரும் வாய் அடைத்துப் போய் உள்ளார்கள். இலங்கையில் மனித உரிமை இன்னும் மேம்படவில்லை என்றும். யுத்தம் முடிந்த பின்னர் தான் அது மிக மோசமாக மாறி இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக் காட்டி, ஸ்காட்லன் பொலிசார் கொடுக்கும் உதவிகளை,  மற்றும் பயிற்ச்சிகளை தாம் நிறுத்துவதாக இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள். இது புலம் பெயர் தமிழர்களுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு பாரிய வெற்றியாக பார்கப்படுகிறது.

போராட இனம் முன்னேற முடியாது என்ற தலைவரின் சத்திய வாக்கு பலித்து விட்டது என்று தான் கூறவேண்டும். அன்று கடும் குளிரில் நின்று தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு இன்று பலன் கிடைத்துள்ளது. வீடியோ கீழே இணைப்பு: