März 28, 2024

துணிவுடன் வெளியே வாருஙக்ள்:சிவாஜி!

 

சுகாதாரத்துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக எம்.கே. சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தொவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளை அனுஸ்டிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் காவல்துறை மூலமும் படையினர் மூலமும் நீதிமன்றங்களை அணுகி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றது .

இந்தச் சூழலில் பின்னணியிலேயே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூர முற்படுகின்றார் எனக் கூறி, சில நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள்.எனினும் சில நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளன.

„மாவீரர் நினைவு தினங்கள் இடம்பெறும் துயிலுமில்லங்கள், தற்போது இராணுவ முற்றுகைக்குள் காணப்படுகின்றன.

சுகாதாரத் துறையின் அனுமதியுடன், நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

„குறிப்பாக, அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் மௌனமாக இருக்காது துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்.

„தடை செய்யப்பட்ட நினைவேந்தல் பொருள்களை காட்சிப்படுத்தாமல் , மாவீரர்களின் நினைவேந்தல் செய்வதை யாரும் தடுக்க முடியாது. நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்“ எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.