April 19, 2024

காய்ச்சல் உச்சத்தில்!

வடகிழக்கிலுள்ள துயிலுமில்லங்கள் தோறும் இலங்கை படைகளது பிரச்சன்னம் குவிந்துள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக துப்பரவுப் பணி இடம்பெற்ற போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும், காவல்துறையினரும் நடந்து கொண்டுள்ளனர்.

கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.

இந்நிலையில் தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அக்காணியின் முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது , கோப்பாய் காவல்துறையினர் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

மேலும் சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர் தாமும் துப்பரவு பணியில் ஈடுபடுவதாகக் கூறி துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

அதேவேளை இராணுவம் மற்றும் காவல்துறையினர் தீருவில் மற்றும் முதல் போராளி சங்கர் நினைவு தூபியென எங்கும் குவிக்கப்பட்டுள்ளனர்.