März 29, 2024

நிவாரணத்திற்கும் சாயம்!

 

வடகிழக்கெங்கும் மாவீரர் தின காய்ச்சல் இலங்கை காவல்துறை படைகள் ஈறாக வாட்டிவதக்கி வருகின்ற நிலையில் உதவித்திட்டங்களிற்கு கூட சாயம் பூசப்படுகின்றது

இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் வறிய மாணவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான உதவிகள் வழங்கப்பட இருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அலுவலர்களால் தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.