März 29, 2024

துயர் பகிர்தல் புவனேஸ்வரி தில்லையம்பலம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை Gundelsheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மதுரையாண்டி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேசசிங்கம்(இராசகிளி- ஜேர்மனி), மோகனராசா(மோகன்- ஜேர்மனி), காலஞ்சென்ற விஜயலெட்சுமி தில்லைநாயகி(தில்லா- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தா(ஜேர்மனி), ஸ்ரீநாகேஸ்வரி(ஈசு- ஜேர்மனி), ஜெயபாலன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நாகதீபன், லக்ஸ்மன், கீர்த்தன், தாட்சாயினி, தட்சனா, ஜெனோசான் ஆகியோரின் அப்பம்மாவும்,

அனோசன், பிருந்தன், நிர்மலன் ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கதிரமலை, பரமலிங்கம், மகேஸ்வரி, மங்களேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, தாமோதரம்பிள்ளை, குமாரசாமி, கிருஸ்ணபிள்ளை, நடராசா , நாகம்மா, கனகம்மா, தங்கமுத்து, செல்லம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்,

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியைGet Direction

தொடர்புகளுக்கு

புவனேசசிங்கம்(இராசகிளி) – மகன்

மோகனராசா(மோகன்) – மகன்

ராஜகருணா(ஜெயபாலு) – மருமகன்

தில்லைநாயகி(தில்லா) – மகள்