April 20, 2024

நாவலர் வெளியே வந்தார்!

 யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டப நுழைவாயிலில் நாவலர் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனின் முயற்சியின் பயனாக நிர்மாணிக்கப்பட்ட நாவலரின் சிலையானது இன்றைய திருக்கார்த்திகை விரத நாளில் வைபவ ரீதியாக மாநகர முதல்வரால் இன்று திறந்து வைக்கப்பட்டது

நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

கார்த்திகை தீபத் திருநாளில் இன்று காலை 10.30 மணியளவில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன் நாவலர் பெருமானின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.