April 20, 2024

வன்னியில் நகை திருடியவர் சுமந்திரன்?

வன்னியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களது நகைகளை திருடிக்கொண்டு ஓடியவர் எம்.ஏ.சுமந்திரன் என குற்றஞ்சுமத்தியுள்ளார் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்.

இராசமாணிக்கம் சாணக்கியனை முகமது சாணக்கியன்  சக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை தப்புத்தப்பாக திலீபன் சொல்ல அதனை கண்டித்தார் சி.சிறீதரன்.

இதனால் சிறீதரனை திட்டுவதாக நினைத்து இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை திட்டிய திலீபன் ஒரு கட்டத்தில் சிறீதரனை நீயும் வாத்தியோ என ஒருமையில் அழைத்து பேசினார்.

எனினும் திலீபனின் உரை பின்னர் கன்சாட்டிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.