März 28, 2024

மாதகலில் காணி சுவீகரிப்ப! எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக,  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன.

மாதகல் – ஜே150 கிராம சேவையாளர் பிரிவில், தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள்,  இன்று புதன்கிழமை (17) முன்னெடுக்கப்படவிருந்தன.

இதன் போது, காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்த போது, காணி உரிமையாளர்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள், கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப் பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.