துயர் பகிர்தல் நமச்சிவாயம் செல்வநாயகம். செல்வா

அமரர் நமச்சிவாயம் செல்வநாயகம். செல்வா எனும் ஆளுமை! கண்ணீர் அஞ்சலிகள்

திரு.நமசிவாயம் செல்வநாயகம் அவர்கள் 09.11.2021 இன்று காலமானார்.

அன்னார் பாலிநகர் ஸ்கைலப் கழகத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்…..

எங்கள் ஊரின் அருமையான விளையாட்டுவீரர்ரான அமரர். நமசிவாயம் செல்வநாயகம் அவர்களுடைய இறப்பு செய்தி 09.11.2021 அன்று அறிந்து ஆழ்ந்த கவலையுற்றோம்.

நிமிர்ந்த உருவம், நேர்நடை, குறுகுறுபார்வை துணிச்சலானபேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண் உருவம் கொண்டவர், மிகுந்த மனத்துணிவும் மனதைரியமும் மிக்க இரும்புமனிதர். அமரர் செல்வநாயகம் .

80,90 அன்றைய காலங்களில் அமரர் அன்னார் அவர்கள் எங்கள் ஊரில் விளையாட்டு குழுமங்களை உருவாக்கவும் பயிற்றுவிக்கவும் அரும்பாடுபட்ட மனிதர். கரப்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்ராகவும் , அன்னார் பாலிநகர் ஸ்கைலப் கழகத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரும் ஆவார்.

பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்விகற்றகாலத்தில் சிறந்த ஓட்டபந்தயவீரன் பிற்காலத்தில் பாலிநகர் ஸ்கைலாப் கழகத்தில் கரப்பந்தாட்டம்,தாச்சி(கிளிக்கோடு) கிறிக்கற்விளையாட்டு போன்றவிளையாட்டுக்களில் சிறந்த வீரராக செயல்பட்டவர் ஸ்கைலாப்விளையாட்டுக்கழகத்தின் கிறிக்கற்அணியில் எனதுதலமையின் கீழ் பலவருடங்கள் விளையாடியபோது சிறந்தபந்துவீச்சாளராக செயல்பட்டவர் காலங்கள் வெகுவேகமாக சென்றுவிட விதியும் வேகமாக அவரதுவாழ்வைமுடித்துவிட்டது …அன்னாரது பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆண்டவனின் ஆறுதலைவேண்டுவதுடன் அவரின் ஆத்மாசாந்தியடய பிரார்த்திப்போம் ஓம் சாந்தி..சாந்தி…சாந்தி…