ஜனாதிபதி செயலணிக்கு ‚ஒரே நாடு – ஒரே சட்ட 3 தமிழ் உறுப்பினர்கள்

´ஒரே நாடு – ஒரே சட்டம்´ ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பத்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த செயலணியின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.