April 23, 2024

பெல்ஜியத்தில் நினைவேந்தப்பட்ட சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய மாவீரர்களின் நினைவு நாள்

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏனைய மாவீரர்களினை 07/11/2021 பெல்சியத்தில் எழுச்சிமிக நினைவுகூறப்பட்டத்து.

02.11.2007 அன்று கிளிநொச்சி நகர்ப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் மேற்கொண்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்’ பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அலெக்சு, மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், மேஜர் நேதாசி, லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகிய மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் பெல்சிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில்  இன்று நடைபெற்றது.