April 19, 2024

யாழ் நல்லுார் இராசதானி தொன்மங்களை பாதுகாக்குமாறு கோரிக்கை

யாழ்.நல்லுார் இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழிற்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற கள விஜயத்தின்போது அங்கஜன் இராமநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை கொண்ட யாழ்.மாவட்டமானது, ஏராளமான தொன்மங்களை கொண்டுள்ளது. எனவே அவற்றை பாதுகாப்பது எமது மூதாதையருக்கும், அடுத்துவரும் சந்ததிக்கும் நாம் செய்யும் கடமை எனவும் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.