April 25, 2024

மண்டியிட்டது சிறிலங்கா அரசு – சஜித் பகிரங்கம்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன் சிறிலங்கா அரசாங்கம் மண்டியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார்.

இன்று (25) அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

தேசபக்தி,தேசிய அடையாளம் போன்ற அனைத்தும் டொலர் நோட்டுகளுக்கு முன்னால் சிதறுண்டு போயுள்ளது.

இதனால், நாட்டில் ஒரு புத்திசாலி அரசாங்கமல்லாமல் ஒரு பேரிடர் அரசாங்கமே உள்ளது என எண்ணத்தோன்றுகிறது.

மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் உருவாக்கியது அரசாங்கமே, அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டின் விளைவுகளையே மக்கள் இன்று அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றார்.