April 20, 2024

சுமந்திரனிற்கு வெற்றி:தமிழீழ மீனவர்கள் கைது!

தமிழீழ மற்றும் தமிழக மீனவர்களிடையே மோதல்களை திட்டமிட்டபடி புலனாய்வு கட்டமைப்புக்கள் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் ஆதரவுடன் ஆரம்பித்துள்ளது.

அவ்வகையில் வடமராட்சியை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப் படகு ஒன்றில் இந்திய எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததாக குற்றம் சாட்டி இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காக பயணித்த உள்ளுர் படகொன்றே இந்திய கரையோர காவல் படையினால் கைது செய்யப்பட்டு i;ளனர்.

ஏற்கனவே இலங்கை கடற்படை நடாத்திய தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் கைதாகியிருந்தனர்.

இதற்கு பழிவாங்கவே இந்திய கடற்படை தமிழீழ மீனவர்கள் இருவரை கைது செய்துள்ளது.