April 19, 2024

வடக்கு ஆளுநரிடம் முறையிட ஏற்பாடு!

வடக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் தமக்கு ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டால் தனது இணைப்புச் செயலாளர் மற்றும் பிரத்தியோக செயலாளரை தொடர்பு கொள்ள முடியும் என வடமாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மை நாட்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பில் நான் கவலை அடைகிறேன்.

இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

சமூகத்தில் இடம்பெறுகின்ற சட்டவரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

இவ்வாறான நிலைமைகளில் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக எனது இணைப்புச் செயலாளரது தொலைபேசி இலக்கமான 0777229338, அல்லது பிரத்தியக செயலாளர் இலக்கான 0768095139 இலக்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்