März 28, 2024

சிறையிலும் சாதிக்கும் போராளிகள்!

எங்கிருந்தாலும் சாதிப்பது விடுதலைப்புலிகள் போராளிகளது குணாம்சமாகும்.இலங்கை சிறைச்சாலையில் இருந்து கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இருவர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் வட்டரெக்க மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து 4 கைதிகள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சையில் தோற்றிய புலி சந்தேகநபர் ஒருவரும் மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.