April 19, 2024

துப்பாக்கிச்சூடு நீதிமன்ற வளாகத்தில்…

A man is pointing a gun directly at the lens.

A man is pointing a gun directly at the lens.

துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ஜிதேந்தர் கோகி  உயிரிழந்தார். டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள  நீதிமன்றத்தில்  இன்று வழக்கமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.அப்போது வழக்கு விசாரணைக்கு  பிரபல  ரவுடி  ஜிதேந்தர் கோகி நீதிமன்றில் ஆஜரானார். அப்போது மர்ம நபர்கள் திடீரென நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்பானது.  மேலும் வழக்கறிஞர்கள் உடையில் வந்திருந்த 2 பேரே இத் தீடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் மூவரும் உயிரிழந்தனர்.  மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த  இச்சம்பவம் குறித்து டெல்லி பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.