April 25, 2024

யாழ்ப்பாண மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 56 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டனர்

.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 163 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 25 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவ மனையில் 2 பேர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் ஒருவர் என்று யாழ். மாவடட்த்தில் 31 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 6 பேர் கிளிநொச்சி பொது மருத்துவமனை யில் 3 பேர், மன்னார் பொது மருத் துவமனையில் 2 பேர் வவுனியா செட்டிகுளத்தில் ஒருவர் தொற்றாளர்களாக உறு திப்படுத்தப்பட்டனர். தவிர, பலாலி விமானப் படை முகாமில் 8 பேரும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 4 பேரும், இரணைமடு விமானப் படை முகாமில் ஒருவரும் தொற் றாளர்களாக இனங்காணப்பட்டனர்.