März 28, 2024

வீடு திரும்பினார் சிவாஜிலிங்கம்

பாராளுமன்ற மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்றைய தினம் திங்கட்கிழமை (20) வீடு திரும்பினார்.இவருக்கு, செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோப்பாய்  தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவர் இன்றைய தினம் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்.