März 28, 2024

கவிச்சோலையில் (காவியம் படைத்த கண்மணிகளை கவிபாடி நிற்போம்) என்ற தலைப்பில் கலந்து கொள்ள அழைக்கின்றது எஸ் ரி எஸ் தமிழ் !

 

அன்பான உறவுகளுக்கு எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி
நிர்வாகத்தினரின் இனிய வணக்கம்

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி, எமது ஈழத்தாயகக் கலைஞர்களுக்கான தனித்துவத் தொலைக்காட்சி ஆகும்.

ஐந்து ஆண்டுகளாக இணையவழி முகநூல், யூரூப் மூலமும், மற்றும்
ஈகிள் ஐ பி பொக்ஸ்,வீ ஐ பி பொக்ஸ் ஊடாகவும் ஒளிபரப்பி வருகின்றது

இந்த ஐந்து ஆண்டுகளிலும் பல புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்பி வருவதை நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்கள்..

கலைஞர்கள் சங்கமம் ,
கவிச்சோலை,
அரசியல் ஆய்வுக்களம்,
மருத்துவரும் நாமும்,
அரங்கவேளை,
பாடுவோர் பாடலாம்,
விளையாட்டுக்களம் போன்ற நிகழ்வுகளுடன்

திரு.கணேஸ் அவர்களின்
அரங்கமும் அதிர்வும்,
அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் ஆகிய பன்முகத்தன்மைகள் கொண்ட நிகழ்வுகளுடன்

கவிச்சோலை 44 மேற்பட்ட பன்நாட்டுக்கலைஞர்கள் இன்பத் தமிழும் நாமும் என்ற தலையங்கத்தின் கீழ் கவிபாடிச் சிறப்பித்தார்கள்,

அடுத்து நீங்கள் தொடுத்துவர எடுத்துள்ள தலையங்கம் கார்திகைக்காலம் வர இருக்கின்றது எங்கள் காவல் தெய்வங்களை நினைத்து

 

 

 

 

 

கவிபாட நீங்கள் நான்கு நிமிடத்திற்குள் விடயங்களை எடுத்து வாருங்கள்.ஸ்கைப் இணைப்புப் பதிவே தெளிவானதாக அமையும். நீங்கள் ஸ்கைப் இணைப்பையே பேசுவதற்குப் பயன்படுத்துவது சாலப் பொருத்தமாகும்!

கலந்து கொள்ள அழைக்கவேண்டிய தொடர்பாளர்கள்

(எஸ் ரி எஸ் தமிழ்: 0049 1783591369)
(முல்லை மோகன்: 0049 15773517849)
கணேஸ்: 0033651278122)
பொன் ஜீவகன்: 0049 15757565305)

இது எம்மவருக்கான தனிக்களம்
நீங்கள் இணைந்திட நாளும் வலம் வரும்
சொல்லின்றி செயலாற்றும் , நல்ல
சுவை கொண்டு தமிழ் பேசும் !
நல் எண்ணோடு நம் கலை வளர
நாள் எல்லாம் செயலாற்றும் !
பண்ணோடு இசையும்
பலர் பேசக் களமும்
எண்ணோடு எழுத்தும்
எடுத்துவரும் தளம்!
நீங்கள் இணைந்திட்ட
இணைந்திட வலம் வரும் நாளும் !
எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி