April 24, 2024

ரிஷாட்டின் மனைவி – மாமானாருக்கு பிணை

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகமவைச் சோ்நத 16 வயதுச் சிறுமியான இஷாலினியின் மரணம் தொடர்பிலான வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் 5ஆவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள ரிஷாட் பதியூதீன், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட் நிலையில் அவருடைய விளக்கமறியல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது மனைவி மற்றும் மாமானாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.