April 25, 2024

ஒத்தைக்கு ஒத்தை:சவால் விடும் சஜித்!

கோத்தா அரசு மக்கள் நம்பிக்கையினை முற்றாக இழுந்துள்ள நிலையில் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்து, மக்கள் ஆணையை கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

பொருளாதார பாரிய பின்னடைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சஜித்தின் இவ்வழைப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

நிதி அமைச்சர் மாற்றம்,மத்திய வங்கி ஆளுநர் மாற்றமென கொழும்பு கலங்கியுள்ள நிலையில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.