März 28, 2024

இரண்டாவது ‘ரொறன்றோ தமிழ் திரைப்பட விழா இன்று 10-09-2021 வெள்ளிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் ஆரம்பமாகியது

இரண்டாவது ‘ரொறன்றோ தமிழ் திரைப்பட விழா இன்று கனடா ஸ்காபுறோ நகரில் ஆரம்பமாகியது. இன்றைய அழகிய ஆரம்பவிழாவிற்கு திரைப்பட விழாவின் நிறுவனர்-தலைவர் திரு செந்தூரன் நடராஜாவின் அழைப்பை ஏற்று பலதுறைகளைச் சார்ந்த பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அவர்களின் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சர்கள் மற்றும் தமிழ் பேசும் மாகாண உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றல் தேசிய கீதங்கள் இசைத்தல் என்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. மங்கள விளக்கு ஏற்றல் வைபவத்தில் பல வர்த்தகப் பிரமுகர்கள் நண்பர்கள்; ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டனர்.

ஒன்றாரியோ மாகாண அரசின் அமைச்சர் றேமண்ட் சோ. மாகாண சபைஉறுப்பினர் விஜய் தணிகாசலம் மற்றும் நகரசபை உறுப்பினர் சிந்தியா லாய் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உட்பட சிலர் பாராட்டு உரைகளை வழங்கினார்கள்.

தொடர்ந்த நாளை 11ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள சில திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
அவற்றுள் ஆகாஷ்’ என்ற குறும்படம் மனதைத் தொட்டதாக இருந்தது.

படங்களும் செய்தியும் – சத்தியன்–