März 28, 2024

7வது நாளாகத் தொடரும் ஈருறுளிப் ஓட்ட போராட்டம்!!

7ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயண செயற்பாட்டாளர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்

08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து பசுத்தொன் மாநகரசபை முதல்வராகவும் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் அங்கம் வகிப்பவருமான மதிப்பிற்குரிய புனுவா லுட்சன் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை தான் சார்ந்த ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் , மாநகரசபையிலும் வலியுறுத்துவதாக உறுதிமொழி தந்தார். அத்தோடு ஊடகச் செய்தியாகவும் தமிழர்களின் அறவழிப்போராட்டத்தினை வெளிக்கொணர முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

இன்றைய மனித நேய ஈருருளிப்பயணத்தில் பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் திரு நாதன் அண்ணை அவர்களும் இணைந்து கொண்டு தன் வரலாற்றுக் கடமையினை ஆற்றினார்.