April 19, 2024

சுடலைப்பிரச்சினை:நடமாடும் வாகன தீர்வு!

கொரோனா தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் உடலங்களைத் தகனம் செய்வதில் நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டு தற்காலிக நடமாடும் வெளி  இயந்திரம் மூலம் தகனத்தை முன்னெடுப்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.

வடமாகாணத்தில் இதுவரை 52 உடலங்கள் தகனம் செய்யபபட வேண்டிய நிலையில் இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரே நேரத்தில் 20 வரையான உடலங்களையே குளிர்ஊட்டியில் பாதுகாத்து வைக்ககூடிய வசதியே காணப்படுவதாகவும் இனிவரும் காலங்களில் தகனம் செய்வதில் இவ் நெருக்கடிநிலை தொடருமாயின் உடலங்களை குளிர்ஊட்டிக்கு வெளியில் வைக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார் அந்த வகையில் தற்போது 18 உடலங்கள் யாழ்போதனா வைத்தியசாலையில் இருப்பதாகவும் தகனம் செய்வதில் யாழ்ப்பாணத்தில் ஏற்படுள்ள நெருக்கடி நிலையை போக்குவதற்காக கிங்குராகொடையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சித்த போதும் உறவினர்கள் அதனை விரும்பாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இருந்த போதிலும் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் இருந்து இரண்டு உடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து 5 உடலங்களுமாக மொத்தம் 9 உடலங்கள் இன்று கிங்குராகொடையில் தகனத்திற் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது தகனத்திற்கு கொண்டு வரப்படுகின்ற உடலங்கள் குளிரூட்டிக்குள் இருந்து எடுத்து கொண்டு வரப்படுவதனால் அதனை தகனம் செய்வதற்கு நீண்ட நேரம் செல்வதாகவும் சாதாரணமாக 30கிலோ எரிவாயும் தேவைப்படும் இடத்தில் இவ்வாறான நிpலையில் உள்ள உடலங்களை எரிப்பதற்கு 45 வரையில் தேவைப்படுவதாக சொல்லப்படுகின்றது.

புதிதாக உருவாக்கப்பட இருக்கின்ற மின்தகன நிலையத்தினை அவசர நிலையினைக் கருத்திற் கொண்டு முதலில் தற்காலிகமாக நிறுவி அதனை இயங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.