April 24, 2024

நியூசிலாந்தில் கத்திக்குத்து! 6 பேர் காயம்! தாக்குதல் நடத்திய இலங்கையர் சுட்டுக்கொலை!!

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள கவுண்டவுண் பல்பொரு அங்காடி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2..30 மணியளவில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.குறித்த நபர், அங்குள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் நடத்திய 60 வினாடிகளுக்குள் அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

காயமடைந்த ஆறு பேரில், மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து கேட்டதும் முற்றிலும் எரிச்சலடைந்தேன். இன்று நடந்தது வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்க செயல். இது தவறு எனக் கூறியுள்ளார் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:-

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதல் குறித்து கேட்டதும் முற்றிலும் எரிச்சலடைந்தேன். இன்று நடந்தது வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்க செயல். இது தவறு எனக் கூறியுள்ளார்.

இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்.

குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த குறித்த நபரால் இப் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத அந்த நபர் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) பயங்கரவாதக் குழுவால் ஈர்க்கப்பட்டவர்.

அந்த நபர் இஸ்லாமிய மாநிலக் குழுவால் ஈர்க்கப்பட்ட ஒரு இலங்கை பிரஜை என்றும் நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்தவர்.

கடந்த காலங்களில் அந்த நபரைப் பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் அவரை தடுத்து நிறுத்துவதற்கு சட்டப்பூர்வமான காரணம் எதுவும் இருக்கவில்லை.

அவரை சிறையில் அடைப்பதற்கு ஏதாவது காரணங்கள் இருந்திருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என்று ஆர்டெர்ன் கூறினார்.