April 18, 2024

ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் ஒரு „சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட“ நாடு என்று தலிபான் கூறுகிறது. ஏனெனில் 20 வருட ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியது. அவர்கள் வெளியேறுவதை வரலாற்று தருணம் என்று தலிபான்கள் விவரித்துள்ளனர்.இன்று செவ்வாய்க்கிழமை காபூலின் விமான நிலையத்தை தலிபான்கள் பொறுப்பேற்றனர். கடைசி அமெரிக்க வீரர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

அமெரிக்க இறுதி இராணுவ விமானம் வெளியேறியதை அடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வானவேடிக்கையால் காபூல் இரவு வானத்தை ஒளிரச் செய்தது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் தலிபான்கள்.