April 20, 2024

மிகப் பெரும் அழிவை சந்திக்கப் போகிறீர்கள் – அரசுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை

 

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மாத்திரமல்லாது அதனை பாதுகாத்துக்கொள்ளவும் மக்களின் ஆதரவு அவசியம் எனவும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி வருவதாக துறவிகள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்ட பின்னர், மக்களை மறந்து விடுவதே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அதிகளவிலான பௌத்த பிக்குமார் இணைந்து மிகப் பெரிய பங்களிப்பை செய்தனர்.

அரசாங்கத்தின் தலைவர்கள் தற்போது பிக்குமாரைக் கூட மறந்து விட்டனர். ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமே அவர்களுக்கு பிக்குமார் தேவைப்படுகின்றனர்.

அரசாங்கம் பௌத்த பிக்குமார் கூறுவதையும் வழங்கும் ஆலோசனைகளையும் கேட்பதில்லை. இவ்வாறு செயற்பட்டால், அரசாங்கம் மிகப் பெரிய அழிவை நோக்கியே செல்லும்.

நாட்டில் ஊழல், மோசடிகளும், கொள்ளைகளும், மோசமான காரியங்களும் அதிகரித்துள்ளன எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு முக்கிய பங்காற்றிய பௌத்த பிக்குமாரில் பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.