April 23, 2024

மறுக்கப்பட்ட தமிழ் மொழி

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பத்தை நீதி அமைச்சு கோரியுள்ளது.

இந்த விண்ணப்படிவத்தை தமிழ் மொழியில் நிரப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டி பத்திரத்தில், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளிலேயே நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த விண்ணப்பப்படிவம் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.