April 19, 2024

மிக மோசமான நாடு இலங்கை – சிறிதரன்

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிர்களை பலியெடுத்து இந்த நாடு உலகப்பந்திலே ஒரு பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும் மிக மோசமான நாடு என்ற செய்தியை உலகம் முழுவதும் சொல்வதற்கு காரணமாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும்.

அத்தோடு, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் கையளிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 பேரின் விபரங்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.