April 24, 2024

துயர் பகிர்தல் புவனேஸ்வரியம்மா சிங்காரவேலு

திருமதி புவனேஸ்வரியம்மா சிங்காரவேலு

தோற்றம்: 29 மார்ச் 1944 – மறைவு: 18 ஜூலை 2021

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரியம்மா சிங்காரவேலு அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாதகலை சேர்ந்த காலஞ்சென்ற சிங்காரவேலு(உதவி அரசாங்க அதிபர்- செட்டிகுளம், கரைதுறைப்பற்று மற்றும் தலைமைச் செயலக மேலதிக உதவி அரசாங்க அதிபர்- முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. குமரவேள்(மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்- வடமாகாணம்), தாரணி(இங்கிலாந்து), காலஞ்சென்ற முருகவேள்(பேரெழிலன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலராசா(இங்கிலாந்து), துஷ்யந்தி(மாகாண கால்நடை அபிவிருத்தித் திணைக்களம்) ஆகியோரின் மாமியும்,

கனிகை(இங்கிலாந்து), காலஞ்சென்ற எழுபரிதி, எழினி, பிரிதிகை(இங்கிலாந்து), வேளினி, வேணிலா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரியம்மா , நவரட்ணசாமி, இராஜலக்சுமியம்மா மற்றும் செல்வமாணிக்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற அம்பிகையம்மா, கண்டுமணி(இங்கிலாந்து), காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

ரத்தினம் சண்முகம் தம்பதிகளின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01.00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

இல. 30/2, விதானையார் வீதி,
சுண்டிக்குளி.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
குமரவேள் – மகன் Mobile : +94 77 650 8517
தாரணி – மகள் Mobile : +44 753 964 6919