April 20, 2024

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!

ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் இதனை தெரிவத்துள்ளார்.

வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்ததல், புதிய சேவையாளர்களை நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.