April 24, 2024

திடீரென வைத்தியசாலையில் ரிஷாட் பதியூதீன்

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் திடீரென  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்த நிலையிலேயே, ரிஷாட் பதியூதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.