April 24, 2024

இங்கிலாந்தின் 55 வருட கால காத்திருப்புக்கு கிடைத்த தோல்வி! கிண்ணத்தை சுவீகரித்தது இத்தாலி

 

யூரோ கால்பந்து தொடரின் இறுதி ப் போட்டியில் இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும், யூரோ 2020 கால்பந்து தொடர் பிரித்தானியாவின் உள்ளுர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமானது.

இங்கிலாந்து மற்றும் இத்தாலி மோதிக்கொள்ளும் இந்த இறுதிப் போட்டி, லண்டனில் வெம்லி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டி துவங்கிய இரண்டாவது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் Luke Shaw கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.

ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்க, இங்கிலாந்து 1-0 என்று முன்னிலையில் இருந்த நிலையில்,  83-வது நிமிடத்தில், இத்தாலி வீரர் leonardo bonucci கோல் அடித்தார்.

போட்டியின் முடிவில்(90 நிமிடம்) இரு அணிகளுமே ஆட்ட நேர முடிவில் 1-1 என்று சம நிலை வகித்தது.

கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால், போட்டி அடுத்த கட்டமான பெனால்ட்டி ஷுட்டிற்கு சென்றது.

இதில், கொடுக்கப்பட்ட 5 பெனால்ட்டி ஷுட்டில், இத்தாலி 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று,

யூரோ 2020 சாம்பியன் என்ற பட்டத்தை பெற்றது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் கடும் சோகமடைந்தனர்.

1966 ம் ஆண்டுக்குப் பின்னர் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து கால்பந்து அணி உலகின் முக்கிய கால்பந்து தொடரொன்றின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இறுதியில் தோல்வியையே தழுவியுள்ளது.