April 19, 2024

115 வீரர், வீராங்கனைகள் தகுதி – இந்திய ஒலிம்பிக் அணி 14-ந்தேதி ஜப்பான் செல்கிறது

115 வீரர், வீராங்கனைகள் தகுதி - இந்திய ஒலிம்பிக் அணி 14-ந்தேதி ஜப்பான் செல்கிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 10 பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 63 வீரர்களும், 52 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 115 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மரப் படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 18 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வருகிற 14-ந்தேதி டோக்கியோ புறப்பட்டு செல்கிறது. இதை இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா சென்னையில் நடந்த விழா ஒன்றில் தெரிவித்தார்.

115 வீரர்-வீராங்கனைகளும், பயிற்சியாளர்களும், அதிகாரிகளும் முதல் கட்டமாக செல்ல இருப்பதாக அவர் கூறினார். பயிற்சியாளர், அதிகாரி என மொத்தம் 66 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார்கள்.

டோக்கியோ சென்றடைந்ததும் இந்திய அணியினர் 4 நாட்கள் தனிமைபடுத்தப்படுவர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 10 பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.