April 20, 2024

இரண்டுபட்டது மைத்திரி அணி!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பிளவடைய ஆரம்பித்துவிட்டதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

குறிப்பாக பஸில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற மீள் வருகையே இதற்கு காரணம் எனவும், சுதந்திரக் கட்சியிக்குள் பஸில் அணி, பஸில் எதிரணி என அணிகள் உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு அணிகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களான லசந்த அலகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் பஸில்வாதிகளாக உள்ளனர்.

கட்சியின் பொதுச் செலயாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செலயாளர் பேராசிரியர் ரோஹண பியதாஸ உள்ளிட்ட சிலர் பஸில் எதிரணியினராக உள்ளனர்.

இந்த நிலையில் பஸில் ஆதரவு அணியினர் நேற்று மாலை, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் வைத்து பலமணிநேரம் மந்திராலோசனை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகைக்கு இவர்கள் முழு ஆதரவை வழங்கவும் தீர்மானித்திருக்கின்றனர்.

இந்நிலையில், விரைவில் சுதந்திரக்கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்கம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகின்றது.