April 18, 2024

திருமலையை எட்டிப்பார்த்தது டெல்டா?

இந்தியாவின் கொடிய ‚டெல்டா‘ வகை திரிபுபெற்ற வைரஸ் பாதிப்புடன் திருகோணமலையில் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்.

அந்த வகையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் டெல்டா திரிபு தொற்றாளர்கள் கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.