April 23, 2024

சிறிலங்காவில் வீதி விபத்துக்களில் தொடர்ந்தும் உயிர்ப்பலி

இலங்கையில் வீதி விபத்துகள் மூலம் உயிர்ப்பலி ஏற்படும் துயரம் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பேர் வீதி விபத்துகளில் சிக்கி உயிரிழந்தள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் பாதசாரிகள் மூவரும், உந்துருளி செலுத்துநர்கள் ஐவரும் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சாரதிகளுக்கு ஏற்படும் நித்திரைக் கலக்கம், உடல்நலக் குறைவு, மது அருந்தியிருத்தல், கவனயீனம் மற்றும் வீதியின் குறைப்பாடுகளைக் கவனத்திற்கொள்ளாமல் வாகனங்களை செலுத்துதல் என்பன அண்மைக்கால வாகன விபத்துக்களுக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.