April 23, 2024

கோண்டாவிலில் வன்முறை நால்வர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பஸ் டிப்போவுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அத்துடன், அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் வீடொன்றில்  தீவிபத்து ஏற்பட்ட நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதுடன், இரண்டு உந்துருறுளியில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

சம்பத்தில் வாகனங்கள் உள்பட பெறுமதியான பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.