April 18, 2024

தடையின்றி முள்ளிவாய்க்கால்:நீதிமன்று அனுமதி!

முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கிய திருத்திய கட்டளை பிரகாரம் „முள்ளிவாய்க்கால் நினைவுதினம் சுகாதார நடைமுறைகளைப்

பின்பற்றி நினைவுகூரப்படலாம்.“ என அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்’ 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை உடன் இரத்துச் செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 37 பேருக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவில் அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றவர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றும் 20 இற்கும் மேற்பட்டவர்களுக்குத் எதிராக தடையுத்தரவு பெறுவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் பிரிவுகளினால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்தத் தடையுத்தரவுகளை உடன் இரத்துச் செய்யுமாறும், நினைவேந்தல் செய்வதற்கு அனுமதிக்குமாறும் கோரியே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணைகளையடுத்து முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கிய திருத்திய கட்டளை பிரகாரம் „முள்ளிவாய்க்கால் நினைவுதினம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவுகூரப்படலாம்.“ ஏன அறிவிக்கப்பட்டுள்ளது