April 19, 2024

இனஅழிப்பை நினைவுகூர ஆயர்கள் கூட்டாக அழைப்பு!

மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தலிற்கு வடகிழக்கு மறைமாவட்ட ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின்போது பலியானவர்களுக்கு இறுதிக்கிரிகைகள்கூட செய்யமுடியாது புதைத்துவிட்டு தப்பிப் பிழைத்து வந்தவர்களும், அதற்கு சாட்சிகளாக இருக்கும் ஏனையவர்களும் பலியானவர்களை கண்ணீரோடு நினைவுகூரும் நாள மே18. இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையுடைய நாளாகவும் அந்நாள் இருக்கின்றது. படுகொலைசெய்யப்பட்டவர்கள் அனுபவித்த வேதனைகளும் துன்பங்களும் விடுதலை வாழ்வுக்கு தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றன.

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்திலும் குழப்பங்களிலும் தமது உயிர்களை இழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படியாகவும் கேட்டுநிற்கின்றோம்.

மே 18 2021 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மூவேளை செப மணியோசை எழுப்பவும்                    மக்களை செபிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.    6.15 க்பு இறந்தோரை நினைவுகூர்ந்து துக்க மணி ஓலிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செய்யவும் செபிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் ,யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்,மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர்  ஆகியோருடன்           மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும்  கூட்டாக அழைப்பினை விடுத்துள்ளனர்.