April 19, 2024

2021 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட பெண் விருதினை France இல் இருந்து பெறுபவர் திருமதி பிரபாதரன் சுஜித்தா.

2021 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட பெண் விருதினை France இல் இருந்து பெறுபவர் திருமதி பிரபாதரன் சுஜித்தா.
புலம் பெயர்ந்து France இல் வாழ்ந்து வரும் ஈழத்தமிழிச்சியான திருமதி பிரபாதரன் சுஜித்தா ஒரு ஒப்பனைக் கலைஞர் மட்டுமல்லாது பல்துறை திறமையாளரும் கூட, தனது 13 ஆவது வயதில் ஒப்பனைத்துறை சார்ந்து ஏற்பட்ட ஆர்வம், 16 வயதில் இவரை ஓரு தேர்ந்த ஒப்பனையாளராக அடையாளம் காட்டியது. அதன் தொடர்ச்சியாக தொழில்சார் தகைமையினை பெற்று
புலத்தில் ஒப்பனையாளராக வலம் வந்தார்.தனது ஆசானின் மிகுந்த பாராட்டிற்குரிய மாணவியாக தனது திறமைகளை பல்துறைகளிலும் காட்டிவந்தார்.
2009 இல் புலர் பெயரந்த இவர். 2020 இல் சர்வதேச தர அழகுக்கலை போட்டியில் சிறந்த ஒப்பனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவரது திறமைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சிறந்த சாதனையாளருக்கான „சிகரம் தொட்ட தமிழ் பெண்“ விருதினை பெண்ணை போற்றும் மகளீர் தினத்தில் வழங்கி கெளரவிப்பதில் அகில இலங்கை தமிழ் அழகுசிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் பெருமை கொள்கிறது,