April 20, 2024

ட்ரோன் கமரா! இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவில் பகுதியில் ட்ரோன் கமரா பயன்படுத்திய 33 வயதுடைய இளைஞர் விடேச அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த டரோன் கமராவைப் பயன்படுத்தி அவர்  புகைப்படம் எடுத்த குற்றசாட்டே முன்வைத்தே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் டரோன் கமராவைப் பயன்படுத்தி காணொளிபகுதிகளையும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.