März 28, 2024

இன்டர்போல் தகவலில் முல்லையில் கைது?

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணவன் மனைவியான இருவர் இன்று இன்டர்போல் காவல்துறை தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதினை இலங்கை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ள போதும் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.

கடல் வழி ஆட்கடத்தல்களை முன்னெடுப்பது தொடர்பிலேயே கைது நடந்ததாக தெரியவருகின்றது.