April 19, 2024

நாடாளுமன்ற அமர்வில் கைமாறும் சுமந்திரனின் பதவி?

நாடாளுமன்ற அமர்வில் கைமாறும் சுமந்திரனின் பதவி?

ஸ்ரீலங்காவில் நடை பெற்ற பொதுத்ட தேர்தலின் பின்னர் அமையப்பெற்றுள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது.

இதன் போது தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சத்திய பிரமணம் மற்றும் கன்னியுரையாற்றவுள்ளனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பான தீர்மானத்தை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீர்மானம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு வீதம் சரிவு, தேசியப்பட்டியல் விவகாரம் என கூட்டமைப்புக்குள் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.